அக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல்?
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என நம்பகமான வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டும் எனவும், தற்போதைய ஜனாதிபதி நவம்பர் 17ஆம் திகதிக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் நவம்பர் 18ஆம் திகதிக்கு பின்னர் தற்போதுள்ள அரசாங்கம் சட்டபூர்வமானதாக அமையாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}