எகிப்து எல்லையை அண்மித்த ரபா பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இஸ்ரேல் படையினர் முற்றுகைக்கு பிரான்ஸ் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ரபா பகுதியில் உள்ள பொதுமக்களை இஸ்ரேல் கட்டாயமாக வெளியேற்றுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே பிரான்ஸ் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
அப்போது அவர் ரபாவில் இருந்து பொதுமக்களை கட்டாயமாக வெளியேற்ற முயற்சி செய்வது போர் குற்றமாகும் எனவும், காசாவுக்குள் நுழையும் அனைத்து இடத்தையும் உடனடியாக திறக்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் வடக்கு காசாவில் மிகப்பெரிய அல்-ஷிபா மருத்துவமனை அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி காசாவில் அமைதி திரும்ப வேண்டும் என பிரார்த்தனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.