காசாவில் 2 வைத்தியசாலைகள் இஸ்ரேலிய படையினரால் முற்றுகை
இஸ்ரேலிய படைகள் காசாவில் உள்ள பிரதான இரண்டு வைத்தியசாலைகளை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அல் – ஷிஃபா வைத்தியசாலையில் ஒரு வாரத்துக்கு மேலாக இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீதான தொடர் தாக்குதலில் 18 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசாவில் நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் 32,226 பேர் உயிரிழந்துள்ளதுடன் 74,518 பேர் காயமடைந்துள்ளனர்.
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}