இந்தியா , PARIS கழகம் உள்ளிட்ட இருதரப்பு கடன் வழங்குநர்கள் குழுவுடன் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இலங்கை விரைவில் நிறைவு செய்யவுள்ளதாக The Hindu செய்தி வெளியிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு அமைய, அதிகபட்சமாக 6 வருடங்கள் கடன் சலுகைக் காலம் வழங்கப்படவுள்ளது. கடனை மீள திருப்பிச் செலுத்தும்போது, ஏற்கனவே அறவிடப்படவுள்ள வட்டியும் குறைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக The Hindu செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா, PARIS கழகம் உள்ளிட்ட 17 இருதரப்பு கடன் வழங்கும் நாடுகள் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
சீனா இந்த குழுவில் அங்கம் வகிக்கவில்லை என்பதுடன், அவர்கள் கண்காணிப்பு மட்டத்தில் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கின்றனர்.
சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடனை மீள செலுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் ஏனைய கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.