கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க பெண்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் ஒன்றியக் கூட்டமைப்பு கூறுகிறது.
சுமார் 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அதன் தலைவர் நிபுணர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கடந்த வருடம் முதல் தடுப்பூசி போடும் பணி முடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவிக்கையில்:-
பல மாதங்களாக இது தொடர்பான தடுப்பூசிகளுக்கு உலகளாவிய தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஓடர் செய்யப்பட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும்
ஒன்றரை வருட காலத்திற்கு தேவையான தடுப்பூசிகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.